என்ன பெண்மையோ நீ - கண்ணம்மா
உன்னுயிர் எமக்களித்தாய்.
மென்மை துறந்திங்கு நீ - தமிழன்னை
மேன்மை துலக்க வந்தாய்.
வன்மை பூண்டனையோ நெஞ்சில்- உனையே
வரமென ஈந்தனையோ?(எமக்கு)
கன்னல் மொழிப் பதுமை - ஒரு
கரும் புலியான(து) புதுமை.
பள்ளி செல வழியிலையே- தமிழ்
பள்ளிகளே சாம்பல் மேடாகையில்
கொள்ளி போட்ட குரங்குகளை - கொடும்
சமரில் கொன்று போட னினைந்தாய்
சுள்ளி முட் புதர்க் காட்டில்- சுடும்
இருட்டு நிழலில் உறைந்தாய்
வெள்ளி முளைத்த வோர் இராவில் - வெந்து
சாம்பரானையோ போர் வேள்வியில்..?
சாவின் பின்னால் பிடி சாம்பராய் - கண்ணம்மா
ஈமைக் கிரியைக்குமிங்கு மிடமிலையா?
காவு கொடுத்தேன் மகளேயுனை- கந்தகக்
குளம்பில் எரி சுவாலையாய்.
தேவ வரமென்றுனையே கண்ணம்மா
சீராட்டி வளர்த்தெடுத்தேன்
சாவு வரவானதோ தேவதையே- உனை
தீயில் கொய்து போடனையோ?
மீள வருவாயோ கண்ணம்மா - போர்
இன்னமும் பாதியிலே
சூழ வருவாயோ யெம் கண் குளிர - புலி
தோழர்கள் கூடியொருங்கே
வாழ வைக்க வேண்டியுனை - நான்
வாரிசாக பெற்றெடுத்தேன்
மீளாத் துயரழித்து எமையே- மாண்டு
போக வைத்தாயே யுன் மரணத்தில்...
கொல்லையிலே நீ வைத்த பதியம் - கண்ணம்மா
முல்லையாய்ச் சொரியுது பார்
இல்லையே நீ யிங்கு நீரூற்ற - யுனை
எண்ணிச் சொரியுது பார் கண்ணீர்
அள்ளி அம்மலரெடுத்து ஆவி துடிக்க - வோர்
ஆரம் தொடுத்து வந்தே னுனக்கு..
எல்லையிலே உன் கல்லறையில் - அதை
இருத்திப் பார்கிறேன் அழகே!
உன்னுயிர் எமக்களித்தாய்.
மென்மை துறந்திங்கு நீ - தமிழன்னை
மேன்மை துலக்க வந்தாய்.
வன்மை பூண்டனையோ நெஞ்சில்- உனையே
வரமென ஈந்தனையோ?(எமக்கு)
கன்னல் மொழிப் பதுமை - ஒரு
கரும் புலியான(து) புதுமை.
பள்ளி செல வழியிலையே- தமிழ்
பள்ளிகளே சாம்பல் மேடாகையில்
கொள்ளி போட்ட குரங்குகளை - கொடும்
சமரில் கொன்று போட னினைந்தாய்
சுள்ளி முட் புதர்க் காட்டில்- சுடும்
இருட்டு நிழலில் உறைந்தாய்
வெள்ளி முளைத்த வோர் இராவில் - வெந்து
சாம்பரானையோ போர் வேள்வியில்..?
சாவின் பின்னால் பிடி சாம்பராய் - கண்ணம்மா
ஈமைக் கிரியைக்குமிங்கு மிடமிலையா?
காவு கொடுத்தேன் மகளேயுனை- கந்தகக்
குளம்பில் எரி சுவாலையாய்.
தேவ வரமென்றுனையே கண்ணம்மா
சீராட்டி வளர்த்தெடுத்தேன்
சாவு வரவானதோ தேவதையே- உனை
தீயில் கொய்து போடனையோ?
மீள வருவாயோ கண்ணம்மா - போர்
இன்னமும் பாதியிலே
சூழ வருவாயோ யெம் கண் குளிர - புலி
தோழர்கள் கூடியொருங்கே
வாழ வைக்க வேண்டியுனை - நான்
வாரிசாக பெற்றெடுத்தேன்
மீளாத் துயரழித்து எமையே- மாண்டு
போக வைத்தாயே யுன் மரணத்தில்...
கொல்லையிலே நீ வைத்த பதியம் - கண்ணம்மா
முல்லையாய்ச் சொரியுது பார்
இல்லையே நீ யிங்கு நீரூற்ற - யுனை
எண்ணிச் சொரியுது பார் கண்ணீர்
அள்ளி அம்மலரெடுத்து ஆவி துடிக்க - வோர்
ஆரம் தொடுத்து வந்தே னுனக்கு..
எல்லையிலே உன் கல்லறையில் - அதை
இருத்திப் பார்கிறேன் அழகே!
No comments:
Post a Comment