Saturday, March 10, 2007

கண்ணம்மா.

என்னைப் பொறுத்தவரை என் பேனாமுனை கூட பெருமைப்பட வேண்டும், தன்னால் என் படைப்புகள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்ததேயென்று....!
இது ஒரு அபரிமிதமான ஆசை தான். அநேகமான ஒவ்வொரு படைப்பாளியிடமும் கிளர்ந்தெழக் கூடிய ஒரு பேராசை தான். தன்னுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் எல்லோரையும் போய் சேர வேண்டும் , எல்லோராலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற ஒரு படைப்பாளியின் ஏக்கம் அறிவு பூர்வமானதா என்ற கேள்வி எப்பவுமே இருக்கிறது....
படைப்பாளி தன்னுடைய கருத்து எல்லோரையும் போய் சேர வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஓரளவு நியாயமானது ஆனால் எல்லொராலும் அங்கீகரிக்கப் பட வேண்டுமென்று எதிபார்ப்பது அதிகபட்டசமான பேராசை..தான்!
ஒவ்வ்வொரு படைப்பாளிகளும் தம்முடைய கருத்துக்களைச் சொல்ல ஒரு கதாபாத்திரத்தைக் கையாளுவது வழமை. அப்படி பிரபல்யமான கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தது பாரதியின் கண்ணம்மா ! கண்ணம்மா என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்து தன்னுடைய காதல் உணர்வை மிக நன்றாகவே வெளிக்காட்டியிருந்தார் பாரதி.
என்றாலும் என் மனதில் ஒரு கேள்வி , அத்தனை புதுமை விரும்பியான பாரதி தன்னுடைய கண்ணம்மாவை குழஎதையாகவும் காதலியாகவும் மட்டுமே படைத்திருந்தார். ஏன் தன்னுடைய சுதந்திரப் போராட்டப் பாடல்களில் சம்மந்தப்படுத்தவில்லை என்று ..?
அந்த பாரதி அன்று செய்யத் தவறியதை நானும் செய்ய விரும்பவில்லை... ஆமாம்... கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்!
கண்ணாம்மாவுக்கு நூற்றாண்டுக்கும் மேலாக தாலாட்டையும் , காதல் உணைவயும் தவிர வேறெதுவும் பாரதி கற்றுத் தரவில்லை. இத்தனைகாலமும் கற்பனைச் சுவையிலும் , உவமை வலையிலும் பின்னிப் பிணைந்திருந்ததிலிருந்து விலத்தி நிஜமான தற்காலத்தின் யதார்த்தமான வாழ்கையின் இன்னொரு பக்கத்தைக் கண்ணம்மாவுக்குக் காட்டியிருக்கிறேன்.



.

1 comment:

ஜோதிஜி said...

உங்களிடம் உரையாட விரும்புகின்றேன். ஈழம் தொடர்பாக.

தயை கூர்ந்து நீங்கள் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள இயலுமா?

texlords@gmail.com